Tuesday 7th of May 2024 03:19:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே நாளில் 23 பேருக்கு தொற்றுறுதி!

யாழை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே நாளில் 23 பேருக்கு தொற்றுறுதி!


யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இன்று யாழ் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 382 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 387 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் குறித்த மேலதி விபரம் விரைவில்....


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE